முதன்முதலாக 'காக்கிச் சட்டை' போடுகிறார் விக்டர் அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் முதன்முதலாக வில்லன் கேரக்டரில் நடித்து மீண்டும் கோலிவுட்டுக்கு ரீஎண்ட்ரி ஆன அருண்விஜய், தற்போது முதன்முதலாக ஒரு படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

'ஈரம்' அறிவழகனின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் இந்த படத்தில் அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அருண்விஜய் க்ளீன் ஷேவ் முகத்துடனும் சற்றே கூடுதல் எடையுடன் கூடிய கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நிஜத்தில் உள்ள எந்த போலீஸ் அதிகாரி போன்றும் கெட்டப் வைக்கப்போவதில்லை என்றும் முழுக்க முழுக்க இயக்குனரின் ஆலோசனைப்படி தன்னுடைய போலீஸ் தோற்றம் இருக்கும்' என்றும் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

மெடிக்கல் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான திரைக்கதையை பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து அறிவழகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்