ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மொத்தம் எட்டு அணிகள் இந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறவுள்ளன. அந்த எட்டு அணிகளின் கேப்டன்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய்சேதுபதி, ஜீவா ஆகிய எட்டு நட்சத்திரங்கள் எட்டு அணிகளின் கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்த எட்டு அணிகளுக்கு மதுரை காலோஜ், சென்னை சிங்கம்ஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரினோஸ், கோவை கிங்ஸ், சேலம் சேட்டாஸ் என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு அணியில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் மற்றும் பிராண்ட் அம்பாசிடர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்