பின்லேடன் திருச்சிக்கு வரப் போறாராமே...


உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் பின்லேடன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் வேட்டையாடப்பட்ட பின்லேடன் விரைவில் திருச்சிக்கு வரப்போறாராம்.
  
ஆம் அறிமுக இயக்குனர் அரவிந்த் என்பவர் இயக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'பின்லேடன்'. பின்லேடன் திருச்சிக்கு வந்தால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னாவாக இருக்கும் என்பதன் கற்பனையே இந்த படத்தின் கதையாம். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தயாராக இருக்கும் இந்த படத்தில் சிவா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக மாயா நடிக்கவுள்ளார். பின்லேடன் பாத்திரத்திற்கு நடிகர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
 
பாலிவுட்டில் 'Tere Bin Laden' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்த படத்தின் ரீமேக்தான் இந்த படமா? என்று இயக்குனர் அரவிந்திடம் கேட்டபோது அந்த படத்திற்கும் இந்த படத்திற்கு எவ்வித சம்பதமும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க வித்தியாசமான படம் என்றும் கூறியுள்ளார்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்