எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர படத்தில் விஜய்?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இளையதளபதி ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

'பாகுபலி 2' படத்தை முடித்தவுடன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கவுள்ள சோழப்பேரரசன் கரிகால் சோழன் கதையில் விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சுதீப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும், தீபிகா படுகோனே அல்லது பிரியங்கா சோப்ரா இந்த படத்தின் நாயகி வேடத்திற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தும் சோழப்பேரரசன் கதையில் விரைவில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யும் சோழப்பேரரசனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களும் சரித்திர படத்தில் நடிக்கவுள்ளது கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்