பிரபல இந்தி டிவி நடிகை தற்கொலை. காதல் தோல்வி காரணமா?

தமிழகத்தில் டிவி நடிகர் சாய்பிரசாத், ஆந்திராவில் டிவி தொகுப்பாளினி நிரோஷா ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட நிலையில் நேற்று இந்தி டிவி நடிகை ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி டிவி தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகையான பிரதியுஷா நேற்று இரவு திடீரென தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனே விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி என்று கூறப்பட்டாலும் அவரது கைப்பட எழுதிய கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ராகுல்சிங் என்பவரை பிரதியுஷா காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் இடையே சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிரதியுஷா தனது வாட்ஸ் அப்பில் 'மரணத்திற்கு பின் என் முகத்தை பார்க்க வராதே' என்று தனது காதலர் ராகுலுக்கு மராத்தி மொழியில் குறிப்பிட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் ராகுலிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்