போதையுடன் கூடிய அதர்வாவின் அடுத்த பட டைட்டில்


 
அதர்வா முரளி நடித்த முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் மீண்டும் அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அதர்வா புதியதாக தொடங்கிய தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'செம போத ஆகாத' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மது பாட்டிலின் பின்னால் அதர்வா முரளி தாடியுடன் இருப்பதுபோல் இந்த பர்ஸ்ட்லுக் அமைந்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
 
ஏற்கனவே 'சண்டி வீரன்', 'ஈட்டி', மற்றும் 'கணிதன்' ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களில் நடித்த அதர்வாவுக்கு இந்த படம் நான்காவது வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்