'தெறி' க்கு வைக்கப்பட்ட செக், தவிப்பில் தியேட்டர்காரர்கள்

'தெறி' திரைப்படம் வருகிற 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது. 'வேதாளம்' படத்திற்கு படம் வெளியான ஒரு வாரத்திற்கு சர்வசாதரணமாக 500 ரூபாய் கட்டணம் வைத்து பலரும் லாபத்தை அள்ளினார்கள். அந்த லாபம் முழுவதும் தியேட்டர்காரர்கலையே சேர்ந்தது. அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு மேலாதிக்கமாக வசூலித்த கட்டணம் கணக்கில் வராது. அது விநியோகஸ்தர்களையும் சென்று சேராது. "வேதாளம்" படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு லாபம் சில கோடி மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

'வேதாளம்' படம் போலவே 'தெறி' படத்தையும் அப்படி ஒரு விலை நிர்ணயம் செய்து லாபத்தை அள்ளலாம் என கணக்கு போட்டார்கள் சில தியேட்டர்காரர்கள். ஆனால் அவர்களின் பேராசையில் ஒரு பெரிய பராங்கல்லே விழுந்து விட்டது. தியேட்டர்களில் அளவுக்கதிகமான கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி வசூலிக்கும் தியேட்டர்கள் மீது புகார் தெரிவித்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, இது குறிப்பாக 'தெறி' படத்தை மனதில் வைத்தே செயல்படுத்தப்படலாம் என்று திரையுலக வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளன. அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்தவர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கலாம். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திற்கு டிக்கெட் விற்றால் எப்போது லாபத்தை அள்ளுவது என புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்