விஜய்யின் 'தெறி'யில் உள்ளே நுழைந்தார் 'பருத்திவீரன்' அமீர்


இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தமிழக ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவை, சேலம் ஆகிய ஏரியாக்களின் பிசினஸ் முடிந்து விட்ட நிலையில் தற்போது மதுரை-ராமநாதபுரம் ஏரியா ரிலீஸ் உரிமையை 'பருத்திவீரன்' உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் மற்ற ஏரியாக்களின் பிசினஸ் குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
 
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்