விஜய்யின் 'தெறி'யில் மகேந்திரன் கேரக்டர் என்ன தெரியுமா?


கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக விஜய் நடித்துள்ளார் என்பதும், டாக்டர் கேரக்டரில் சமந்தா நடிக்கின்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இருந்து அவர் இந்த படத்தில் அமைச்சராக நடித்துள்ளது தெரிய வந்துள்ளது. அமைச்சரான மகேந்திரனுக்கும் போலீஸ் அதிகாரியான விஜய்க்கும் இடையே நடைபெறும் மோதல்தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அமைச்சராக நடித்துள்ள மகேந்திரன் ஒரு காட்சியில் விஜய் மீது சிகரெட் புகையை ஊத வேண்டிய காட்சியும் உள்ளதாம். இந்த காட்சியில் அதிக புகையை விஜய் மீது ஊத இயக்குனர் அட்லி கூறியபோது இயக்குனர் மகேந்திரன் தயங்கினாராம். இதுகுறித்து மகேந்திரன் கூறியபோது, 'எனக்கு எதிரே இருந்த விஜய் மிக அபாரமான எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தியுள்ளார். நான் அதிக புகையை ஊதிவிட்டால், அந்த புகையால் விஜய்யின் எக்ஸ்பிரஷனை ஆடியன்ஸ் முழுவதுமாக ரசித்து என்ஜாய் பண்ண முடியாமல் போய்விடும் என்பதற்காகவே தான் அதிக புகையை ஊதவில்லை' என்று காரணம் கூறினாராம். மகேந்திரனின் இந்த பதிலைக்கேட்டு படக்குழுவினர் திகைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்