அஜித் சொன்ன உலகலாவிய கருத்து

ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள்,  பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரோமோஷன்  நிகழ்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிசியை தொடர்ந்து கடை பிடித்து வருகிறார். அப்படி அவர் வராதபோதும்   யாரும் அவரை வைத்து படம் பண்ண தயங்குவதில்லை. எந்த மீடியாக்களையும் சந்திக்காதபோதும் அவரை பற்றி எழுத யாரும் மறுப்பதில்லை.

அதேபோல் சினிமா உலகினர் நடத்தும் நிகழ்சிகளிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. நான் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற ஒரு வார்த்தையை சொல்லி விலகிக்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஒரு மீடியா நபரிடத்தில், சினிமாவில் ஜெயிப்பதற்கு தான் பட்ட கஷ்டங்களை சொன்னாரம் அஜித். அப்போது , என்னை பொறுத்தவரை, நாம் வளரும்போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். அதேபோல் வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும். இதுதான் நற்பயனை தரும் என்று சொன்னாரம். அஜித் இதை சாதாரணமாக சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன இந்த வார்த்தைகளில் உலகளாவிய வெற்றியின் தத்துவமே அடங்கி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்