நடந்ததை மாற்றி பாலியல் சீண்டல் என பொய்யாக புகார் கூறிய நாட்டமை டீச்சர் - நடிகர் அதிரடி முடிவு


அடுத்தடுத்து தற்போது Me Too ன் மூலம் பல பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன. இதில் சினிமாவை சேர்ந்த பலரும் சிக்கி வருகிறார்கள். அண்மையில் நாட்டாமை படத்தில் கவர்ச்சி டீச்சராக நடித்த ராணி பிரபல நடிகர் சண்முகராஜன் மீது போலிஸில் புகார் அளித்திருந்தார்.

இதன்படி நடந்த விசாரணையில் சண்முகராஜன் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் புகார் வாங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.தற்போது சண்முகராஜன் நடிகை ராணி மீது நடிகர் புகார் அளித்துள்ளார். இதில் அவர் இத்தனை வருட அனுபவத்தில் இப்படியான ஒரு குற்றச்சாட்டு என் மீது வந்தது கிடையாது.

கை கலப்பாக நடந்த விவகாரத்தை பாலியல் புகார் என தவறாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டிற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் எனக்கு ரெட் கார்ட் போட்டாலும் பரவாயில்லை. நான் சினிமாவை விட்டு விலக தயார்.

அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்